மருமகளிடம் அத்துமீறிய மாமனார் - ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

sexualharrasment பாலியல் தொல்லை oldmankilledbyson
By Petchi Avudaiappan Jan 04, 2022 05:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சேலம் அருகே  மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டு வளவு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி லட்சுமி, மகன்கள் வீரமணி, நரசிம்மன் ஆகியோரோடு  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எளையம்பாளையத்தில் உள்ள தறிக்கூடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே இரண்டு ஆண்டுக்கு முன்பு விருதாசம்பட்டியை சேர்ந்த பெண்ணை வீரமணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அடிக்கடி மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தனது கணவரிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே இருவரும் பெற்றோரை விட்டு பிரிந்து விருதாசம்பட்டி கருப்புகவுண்டன் காட்டுவளவிற்கு தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.

அங்கும் அவ்வப்போது வந்து மருமகளிடம் மாமனார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கணவர் வீரமணியிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் தனது மகன் வீரமணியின் வீட்டிற்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர் மகன் மற்றும் மருமகளை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி தந்தையை கண்டித்துள்ளார்.  ஆனால் ராஜேந்திரன் தொடர்ந்து பேச அங்கிருந்த கல்லை எடுத்து தந்தையின் கால்களில் போட்டுள்ளார். பிறகு முகத்தில் கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார்  ராஜேந்திரன் உடலை உடற்கூறாய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தனது தந்தை ராஜேந்திரன் எனது மனைவியிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தப்பாக நடக்க முயற்சித்தார். இது சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

எனது தந்தை ராஜேந்திரன் என்னை கொடுவாளால் வெட்ட முயற்சித்தபோது அவரை தடுத்து தள்ளி விட்டேன். எனது தந்தை என் உயிர் நாடியை பிடித்து இழுத்தபோது இதுக்கு மேல் விட்டால் என்னை கொன்றுவிடுவார் என கருதி வீட்டு முன்பு படியில் இருந்த ஹாலோ பிளாக் கல்லெடுத்து அவரின் இரண்டு கால்கள் மீது போட்டு உடைத்துவிட்டேன். பின்பு அவரது மூஞ்சியில் கட்டையைக் கொண்டு அடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.