பெற்ற 5 வயது மகளை துடிக்க துடிக்க பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தை - அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரி, உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர்.
சதீஷுக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கணவரிடம் சண்டைப்போட்டுக்கொண்டு மனைவி, தனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குழந்தையை பார்க்க மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தனது 5 வயது மகளை அழைத்து கொண்டு, கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு சதீஸ் சென்றிருக்கிறார்.
அப்போது, தனது 5 வயது மகளுக்கு சதீஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு, வீட்டிற்குள் வந்த குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால், தாய் குழந்தையிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, 5 வயது குழந்தை அப்பா... வந்து... என்னிடம்... அப்பா... வந்து... வந்து... என்று அழுதுக்கொண்டே கூறியுள்ளது. குழந்தை சொன்னதைக் கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தாள்.
உடனடியாக கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த சதீஷ் தற்போது தலைமறைவாகியுள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் பகுதியில் நடந்த பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்ற சதீஷ், 15 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.