4 மாநிலங்களில் பாஜக முன்னிலை - தொண்டர்கள் உற்சாகம்
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்திரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெரும்பான்மை இடங்களை விட கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
