2023ல் பயணம் செய்யக் கூடாத 5 நாடுகள்; தப்பித் தவறி கூட போயிராதிங்க - என்ன காரணம் தெரியுமா?
சர்வதேச பயணம்!
சில மனிதர்கள் பொதுவாக பயணம் செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் ஏகப்பட்ட சுற்றுலாத் தளங்கள் இருந்தாலும், சிலர் சர்வதேச பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் எல்லா நாட்டிற்கும் சென்று விட முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதில்.
ஏனெனில் அந்நாட்டு மக்களுக்கே அங்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்குமா? அந்நாடுகளில் நாள்தோறும் பல குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. 2023ம் ஆண்டு பயணம் செல்ல கூடாத 5 நாடுகள் குறித்து இப்போது பார்ப்போம்.
சோமாலியா
சோமாலியா என்றவுடன் ஒரு கண்ணை மறைத்த கடற்கொள்ளையர்கள்தான் நம் கண் முன் வந்துபோகும். இது தொடர்பான திரைப்படங்களும் நாம் பார்த்திருப்போம். சோமாலியாவில் நாள்தோறும் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் நடந்து வருகிறது. குற்றம் பயங்கரவாதம் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக சோமாலியா ஆபத்தான நாடாக உள்ளது.
உக்ரைன்
நமக்கே தெரிந்த ஒன்றுதான் இது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது. ராணுவ தாக்குதல், உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இப்போது இந்த நாட்டிற்குச் செல்வதை தவிர்ப்போம் . ஈராக் பயங்கரவாதம், ஆயுத மோதல்கள், உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக ஈராக் ஆபத்தானதாக அறியப்படுகிறது. தற்போது பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல போராட்ட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஈராக் அரசாங்கம்
பல பொதுமக்களை தூக்கிலேற்றியும் வருகின்றனர்.
வெனிசுலா
இந்தநாட்டில் உள்ளூர் சட்டங்களின் தன்னிச்சையான அமலாக்கம் மற்றும் வரையறுக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக இருக்கும். குற்றச் செயல்கள் காரணமாக வெனிசுலாவிற்கு பயணம் செய்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை கடுமையான பயணத் தடையை அறிவுறுத்துகிறது.
ஹயாத்தி
குற்றம் , உள்நாட்டு அமைதியின்மை மற்றும் வறுமையான சூழ்நிலை ஆகியவை அந்நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. தொழில் முறையில் போட்டி காரணமாக வன்முறையும் அளவு கடந்து காணப்படுகிறது.