நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ரொக்க பரிசு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம் !

By Swetha Subash May 22, 2022 09:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரபல நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செல்லப்பிராணியான நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு புதிதான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் உணவு தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களிடையே தங்களின் நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி ஆம்னி நிறுவனத்தின் நாய் உணவை ஒரு நபர் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ரொக்க பரிசு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம் ! | 5 Lakhs Cash Price Announced If Eaten Dog Food

அப்படி சாப்பிட்டால், அவருக்கு ஐந்து லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலில் கலந்துக்கொள்பவர் நாய் உணவை சாப்பிட்ட பின் அவர்களது அனுபவம் குறித்து நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த பேசிய நிறுவனத்தின் துணை நிறுவனர் ஷிவ் சிவகுமார்,  “ஆம்னி நிறுவனத்தின் பொருட்கள் கலப்படம் இல்லாத தூய்மையான பொருட்கள். நாய் உணவை மனிதர்களும் உட்கொள்ளும் வண்ணம் தயாரித்து வருகிறோம்.

நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ரொக்க பரிசு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம் ! | 5 Lakhs Cash Price Announced If Eaten Dog Food

மலிவான மீதமுள்ள பொருட்களை கொண்டு தயாரிக்காமல் தூய்மையான உருளைக்கிழங்குகள்,பருப்புகள், பூசணிக்காய் போன்றவற்றை கொண்டு தயார் செய்கிறோம்.

இந்த உணவுகளை நாங்கள் சிறந்தது என்று சொல்வதை விட மற்றவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும். இந்தப் போட்டி நாய்க்கு தயாரிக்கப்படுகின்ற உணவுகள் மனிதர்களும் சாப்பிடும் வகையில் தரமானதாக இருக்கின்றது என்று சொல்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.