மணப்பாறை அருகே கோர விபத்து...தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் - 5 பேர் உயிரிழப்பு
மணப்பாறை அடுத்த கல்கொத்தனுாரில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது மணப்பாறை அருகே கல்கொத்தனுார் என்ற இடத்தில் பேருந்து வந்த போது எதிரே கார் ஒன்று வந்துள்ளது.
பின்னர் எதிர்பாரதவிதமாக காரும், பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
காரும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.