திருமணமான 5 நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் திருமணமாகி 5 நாளில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அபிராமி (27). இவருக்கும், ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 23ம் தேதி திருமணம் நடந்தது.
இதனையடுத்து, ஓட்டேரியில் வி.வி.கோயில் தெருவில் உள்ள அக்கா மோகனப்பிரியா வீட்டிற்கு அபிராமி தனது கணவர் சதீசுடன் நேற்று விருந்துக்காக சென்றார். அக்கா வீட்டில் படுக்கை அறைக்கு சென்ற அபிராமி நீண்ட நேரமாகி ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த கணவர் மற்றும் அபிராமியின் அக்கா கதவை தட்டியும் கதவி திறக்கவே இல்லை.
இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நீண்ட நாட்களாகவே அபிராமிக்கு அபாயகரமான கனவு வந்ததாகவும், இதனால், அபிராமி பல நாட்களாக தூங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவர்களிடம் அபிராமி சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்தது.
இப்பிரச்சனையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.