48 ஆயிர ஆண்டுகளாக புதைந்திருந்த வைரஸ் ...கிளைமெட் மாற்றத்தால் வருகிறது - உயிருக்கே உலை..!
தொடர்ந்து பல வகையான வைரஸ்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனத்திற்கே பெரும் அழிவை உண்டாகியிருக்கின்றன.
வைரஸ்
அப்படி சமீபத்தில் வந்து மனித இனத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது தான் கொரோனா தோற்று. கொரோனா தோற்று பாதிப்பின் தாக்கம் இன்றளவும் இருக்கும் சூழலில், மக்கள் அப்போது அனுபவித்த துன்பங்களை மறக்கவில்லை.
இந்த சூழலில் தான், ஆர்டிக் பனிப்பாறைகளில் பல ஆண்டுகளாக உறைந்து கிடைக்கும் பல வகையான வைரஸ்களை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
உலகின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்த பனிப்பாறைகள் உருகிவருவதால், புதைந்து இருக்கும் வைரஸ் வெளிவந்து, சிறிய உயிரினங்களின் மூலம், மனித இனத்திற்கும் பெரிய சவாலாக அமையலாம் என்றும் ஆரய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
48 ஆயிரம்..
2014-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வில், 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உறைவு நிலைக்கு சென்ற வைரஸ்,கண்டறியபட்டு பரவி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
அலாஸ்கா, சைபெரியா, அமெரிக்கா பகுதிகளிலுள்ள பனிப்பாறைகளிலும் இது போன்ற வைரஸ்கள் இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், இது பெரும் அழிவின் துவக்கமாக கூட இருக்கலாமே என்று எச்சரிக்கையையும் ஆரய்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.