நேற்று நடந்த +2 பொதுத்தேர்வை மீண்டும் எழுதாத 47 ஆயிரம் மாணவர்கள்

Tamil nadu Government of Tamil Nadu
By Thahir Mar 22, 2023 06:15 AM GMT
Report

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மீண்டும் தேர்வு எழுத வராத மாணவர்கள் 

இதுவரை தமிழ், ஆங்கில பாடத்தேர்வுகள் நடைபெற்றுள்ளன. நேற்று இயற்பியல், பொருளியல்,கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

47-thousand-students-who-did-not-write-the-exam

இந்த நிலையில் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் தொடங்கிய மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது கல்வி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.