நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்காத கொரோனா : பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல். டெல்லி நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 4-ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஊழியர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Ahead of budget session, over 400 Parliament staff test positive for COVID-19
— ANI Digital (@ani_digital) January 9, 2022
Read @ANI Story | https://t.co/uCOmqLkmv7#Parliament #COVID19 pic.twitter.com/Y4ECxNT3TV
இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.