4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
By Irumporai
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பொன்முடி அறிவிப்பு
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரையர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு
நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர். தகுதி வாய்ந்த 1895 கௌரவ விரிவுரையாளர்களை தேர்வு மூலம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறினார்.