40,000 டன் டீசலுடன் இலங்கைக்கு சென்றடைந்த இந்திய கப்பல் - மக்கள் மகிழ்ச்சி
இலங்கை
40-000-tons-of-diesel
Sri-Lanka
Indian-ship
இந்திய-கப்பல்
40000-டன்-டீசல்
By Nandhini
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வின்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.
இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் டீசல் கட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கப்பல் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஓரிரு நாட்களில் டீசல் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.