சாலையில் நடந்து சென்ற 4 வயது சிறுவன் - திடீரென சாக்கடைக் குழியில் விழுந்த அதிர்ச்சி வீடியோ வைரல்
சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் தெருவில் சாக்கடை குழி திறந்தவெளியில் இருந்துள்ளது.
அந்த தெருவில் 4 வயது சிறுவன் தன்னந்தனியே சென்றுக்கொண்டிருந்தான். அப்போது, திறந்த வெளியில் இருந்த சாக்கடை குழிக்குள் அச்சிறுவன் திடீரென அதில் விழுந்தான்.
நல்லவேளையாக அந்த தெரு வழியாக ஒருவர் பைக்கில் சென்றார். அப்போது, சாக்கடை குழியிலிருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, பைக்கை நிறுத்திய அவர் ஓடி வந்து அந்த சாக்கடை குழியிலிருந்து சிறுவனை வெளியே எடுக்கிறார்.
சத்தம் கேட்டு குழந்தையை சரியான நேரத்தில் அவர் சாக்கடையிலிருந்து வெளியே எடுக்கவில்லையென்றால் அந்தக் குழந்தை இறந்திருக்கலாம்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.