டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி; நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச்சடங்கு நடைபெறாது - உறவினர்கள் போராட்டம்!

Tamil nadu Chennai Death
By Jiyath Sep 10, 2023 07:32 AM GMT
Report

டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டெங்கு காய்ச்சல்

சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் அய்யனார்-சோனியா. இவர்களது மகன் ரக்சன் (4). சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளான்.

டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி; நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச்சடங்கு நடைபெறாது - உறவினர்கள் போராட்டம்! | 4 Year Old Boy Died Of Dengue Fever

இதனையடுத்து பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனை மேல்சிகிச்சைக்காக கடந்த 6ம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுவன் பலி

மதுரவாயல் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால்தான் டெங்குகாய்ச்சல் பரவியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி; நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச்சடங்கு நடைபெறாது - உறவினர்கள் போராட்டம்! | 4 Year Old Boy Died Of Dengue Fever

குறிப்பாக சென்னை மாநகராட்சியின் அலட்சிய போக்கும், இந்த பகுதியின் கவுன்சிலரும் இதுகுறித்து கன்டுகொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி; நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச்சடங்கு நடைபெறாது - உறவினர்கள் போராட்டம்! | 4 Year Old Boy Died Of Dengue Fever

மேலும் நடவடிக்கை எடுக்கும் வரையில் இறுதிச் சடங்கு நடைபெறாது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.