4 மாணவிகள் பலி - முதலமைச்சர் தலா 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளும் உயிரிழந்தனர்.
மாயமான மாணவிகள்
கரூர், தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டிக்காக விராலிமலை அரசுப் பள்ளியில் இருந்து 15பேர் உடற்கல்வி ஆசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.
சடலமாக மீட்பு
அதனையடுத்து, தீயணைப்பு படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் சுழல் இருப்பதை அறியாமல் இறங்கியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் பெற்றோர் பள்ளியில் மயக்கமடைந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.