வேல் யாத்திரைக்கு 4 எம்.எல்.ஏக்கள்; இதில் 40 எம்.பிக்கள் - அண்ணாமலை பேச்சு!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath Feb 27, 2024 09:30 AM GMT
Report

என் மண், என் மக்கள் யாத்திரை 40 எம்.பிக்களை கொடுக்கப் போகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாத யாத்திரை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில் 233வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் இன்று யாத்திரையை தொடங்கியுள்ளார்.

வேல் யாத்திரைக்கு 4 எம்.எல்.ஏக்கள்; இதில் 40 எம்.பிக்கள் - அண்ணாமலை பேச்சு! | 4 Mlas Vel Yatra 40 Mps For This Annamalai Speech

இதனையடுத்து 234வது தொகுதியாக திருப்பூர் தெற்கு தொகுதியில் யாத்திரையை நிறைவு செய்கிறார். பின்னர் மதியம் நடைபெறும் எண் மண், என் மக்கள் நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

Gaganyaan: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் - அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

Gaganyaan: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் - அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

அண்ணாமலை பேச்சு 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் யாத்திரையில் பேசிய அண்ணாமலை “அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது.

வேல் யாத்திரைக்கு 4 எம்.எல்.ஏக்கள்; இதில் 40 எம்.பிக்கள் - அண்ணாமலை பேச்சு! | 4 Mlas Vel Yatra 40 Mps For This Annamalai Speech

மோடி மக்களை சந்திக்கும் கூட்டம் இது. எனவே மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு வர வேண்டும். வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கப் போகிறது" என்றார்.