தகாத உறவை கைவிடாத மகள் - குழந்தைகள் உட்பட 4 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மகளின் செயல்
திண்டுக்கல், சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(65). அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ). இவருக்கும் செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குடும்பமே தற்கொலை
அப்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த தாய், மகளை கண்டித்துள்ளார். இருப்பினும், பவித்ரா உறவை தொடர்ந்துள்ளார். மேலும், பவித்ரா பெயிண்டருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் அவமானம் அடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி, அவரது தாய் செல்லம்மாள் இருவரும் லித்திக்ஸா, தீப்தியை விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, செல்லமாளும், அவரது மகள் காளீஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.