நவீன காலத்தில் 4 கால் மனிதர்கள்.. பின்னோக்கி செல்லும் அறிகுறியா? - விஞ்ஞானிகளையே வியக்க வைத்த இனம்!
நான்கு கால்களில் நடக்கும் வினோதமான இனம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
வினோத மனிதர்கள்
துருக்கி நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் 4 கால்களால் நடந்து வருகின்றனர். அவர்களால் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்று 2 கால்களால் நடக்க முடியாது. இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, கடந்த 2006ம் ஆண்டு இது குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளிவிட்டது.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் ஒரே குடும்பத்தில் சேர்ந்தவர்கள் 4 கால்களில் நடப்பதற்கான காரணத்தை அறியமுடியாமல் உள்ளனர். இது குறித்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பேராசிரியர் ஹம்ப்ரே கூறுகையில், "ஒரு குடும்பத்தில் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர் பிறக்கும்போது மற்ற மனிதர்களை விடவும் சற்று வித்தியாசமாக பிறந்துள்ளனர்".
பேராசிரியர்
இதனைத்தொடர்ந்து, அவர் கூறுகையில், "நம்முடைய முன்னோர்கள் 4 கால்களை பயன்படுத்தி பின்னர் பரிணாம வளர்ச்சியின் காரணாக 2 கை மற்றும் 2 கால்களை உடையவர்களாக மாறினர் என்று ஒரு கருத்து உள்ளது.
முன்னோர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் துருக்கியை சேர்ந்த இந்த குடும்பத்தினர் 4 கால்களில் நடக்கிறார்கள். இந்த குடும்பத்தில் பிறந்த 6வது நபரும் இதேபோன்று 4 கால்களில் நடந்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்து விட்டார். நவீன காலத்தில் இப்படியொரு சம்பவம் இருக்கும் என்பதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மனிதன் பின்னோக்கி செல்ல தொடங்கிவிட்டானா என்று கருத தோன்றுகிறது. இதுகுறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.