இலவச புடவை வாங்க குவிந்த பெண்கள் - நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

Tamil nadu Death
By Sumathi Feb 04, 2023 01:05 PM GMT
Report

இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்றதில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இலவச புடவை 

திருப்பத்தூர், வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.

இலவச புடவை வாங்க குவிந்த பெண்கள் - நெரிசலில் சிக்கி 4 பேர் பலி | 4 Ladies Died In Vaniyambadi Event

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் பலர் மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

4 பேர் பலி

மேலும், 4 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ‘‘இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் வழங்குவதற்காக காவல்துறையினரிடம், தொழிலதிபர் தரப்பினர் எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை’’ என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.  

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.