பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு!

Fire Death Virudhunagar
By Sumathi Jun 29, 2024 04:34 AM GMT
Report

வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

 வெடிவிபத்து

விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பண்டிகைகளையொட்டி பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு! | 4 Died In Sattur Firecracker Factory Accident

அந்தவகையில், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேரளாவை உலுக்கிய வெடிவிபத்து...நான் தான் காரணம்!! நேராக காவல் நிலையம் வந்த நபரால் பரபரப்பு!!

கேரளாவை உலுக்கிய வெடிவிபத்து...நான் தான் காரணம்!! நேராக காவல் நிலையம் வந்த நபரால் பரபரப்பு!!

4 பேர் பலி

மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு! | 4 Died In Sattur Firecracker Factory Accident

இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர். தற்போது, இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.