செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

TN Weather
By Thahir Dec 12, 2022 10:54 AM GMT
Report

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஆயிரம் அடி கன நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு 

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் மாலை 4.30 அளவில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3k-cubic-feet-water-release-from-chembarambakkam

மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6000 அடி கன உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 1500 கன அடி உபரி நீர் என மொத்தம் 7500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.