48 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு - இதில் கவனமா இருங்க மக்களே..

Bihar Death Weather
By Sumathi Jul 18, 2025 06:23 PM GMT
Report

48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கம்

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை இல்லாமல் சில மாநிலங்களில் அதிகமான மழையும் சில இடங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது.

thundering

அந்த வகையில், பீகாரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த மூன்று நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறி காதல் - இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்!

கட்டுப்பாட்டை மீறி காதல் - இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்!

34 பேர் பலி

பலத்த மழையுடன் 30/40 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கைமூரில் உள்ள பகவான்பூரில் 160மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு - இதில் கவனமா இருங்க மக்களே.. | 34 People Died Lightning Strikes 48 Hours Bihar

இந்நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திறந்தவெளியில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.