பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்..இனி ரூ.1000 இல்லை ரூ.3000 - முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

M K Stalin Governor of Tamil Nadu
By Swetha Jun 12, 2024 06:23 AM GMT
Report

புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

 ரூ.3000

தமிழ்நாடு அரசு மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்..இனி ரூ.1000 இல்லை ரூ.3000 - முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு! | 3000 Rs Through 3 Main Schemes Of Tn Govnt

இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்...இனி ரூ.1000 உங்களை தேடி வரும் - தமிழக அரசு அறிவிப்பு!

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்...இனி ரூ.1000 உங்களை தேடி வரும் - தமிழக அரசு அறிவிப்பு!

ஸ்டாலின் அதிரடி

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம.

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்..இனி ரூ.1000 இல்லை ரூ.3000 - முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு! | 3000 Rs Through 3 Main Schemes Of Tn Govnt

போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம்" திட்டத்திற்கும் இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஆகையால் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கபட உள்ளது.