ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் புகைப்படம் : அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை

Roja Guinness World Records
By Irumporai Jul 31, 2022 05:46 AM GMT
Report

ஒரே நேரத்தில்  மூவாயிரம்  போட்டோகிராப்பர்களை வைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில்  ஆந்திரா அமைச்சர் ரோஜா இடம்பிடித்தார்.

அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக  இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர்  ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார்.

ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் புகைப்படம் : அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை | 3000 People Took Photos Of Minister Roja

கின்னஸ் சாதனை

அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர். 

உலகத்தில் இதுவரை யாரும் பெண் மந்திரி ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. இதையடுத்து 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதையடுத்து மந்திரி ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.