பென் ஸ்டோக்ஸ்காக காத்திருக்கும் 3 அணிகள் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு வீரர்கள் குறித்தும் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது.அந்த வகையில் 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இனி விளையாட முடியாது என்று தற்காலிக ஓய்வு அறிவித்து இருந்தார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 2022 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கவில்லை.இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை இந்த மூன்று அணிகள் நிச்சயம் டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை தனது அணியிலிருந்து விடுவித்து விட்டது. இதனால் பென் ஸ்டோக்ஸை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்கும்.
இரண்டாவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் முகமது நபி போன்ற வீரர்களை விடுவித்து விட்டது.இதன் காரணமாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் மிகச் சிறந்த முறையில் விளையாடும் திறமை படைத்த பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வெளிநாட்டு வீரரை ஹைதராபாத் அணி தனது அணியில் இணைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் தீட்டும் என கூறப்படுகிறது.
மூன்றாவதாக பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்திப் சிங் ஆகிய இரு வீரர்களை மட்டுமே அணியில் தக்கவைத்துள்ளது,இதன் காரணமாகவே பஞ்சாப் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தனது அணியில் இணைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது