8 ஆம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு - 3 ஆசிரியர்கள் செய்த கொடூரம்
8 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவிக்கு கருக்கலைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை.
இதனால் பள்ளி தலைமையாசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் உரையாடியுள்ளார். அப்போது மாணவி கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது கருக்கலைப்பு செய்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
3 ஆசிரியர்கள் கைது
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர், மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், படிக்கும் பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாலே கர்ப்பமடைந்ததாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான ஆசிரியர்கள் மூவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.