8 ஆம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு - 3 ஆசிரியர்கள் செய்த கொடூரம்

Sexual harassment POCSO Krishnagiri School Children
By Karthikraja Feb 05, 2025 11:00 AM GMT
Report

 8 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவிக்கு கருக்கலைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை. 

krishnagiri

இதனால் பள்ளி தலைமையாசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் உரையாடியுள்ளார். அப்போது மாணவி கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது கருக்கலைப்பு செய்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் தொடரும் கொடூரம்

ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் தொடரும் கொடூரம்

3 ஆசிரியர்கள் கைது

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர், மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், படிக்கும் பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாலே கர்ப்பமடைந்ததாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். 

பாலியல் வன்கொடுமை

மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான ஆசிரியர்கள் மூவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.