இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil nadu Government of Tamil Nadu Women
By Karthikraja Jun 29, 2025 06:01 AM GMT
Report

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் 3 தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

2023 செப்டம்பர் 15 முதல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், மாதம் தோறும், தகுதியுடைய பெண்களுக்கு ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | 3 Relaxation In Kalaingar Magalir Urimai Thogai

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பயனடைகின்றனர்.

இதில், அரசு ஊழியர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் ஆகிய சிலருக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது என கட்டுப்பாடுகள் உள்ளது.

3 தளர்வுகள்

இந்நிலையில், தற்போது கலைஞர் உரிமை தொகை பெற 3 தளர்வுகள் அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | 3 Relaxation In Kalaingar Magalir Urimai Thogai

இதன்படி, ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.