டிவில்லியர்ஸ் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் இவர்கள் தான்..!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸூக்கு மாற்றாக 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக செயல்பட்ட ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் இருந்து ஓய்வு அறிவிப்பதாக அறிவித்துவிட்டார் இதன் காரணமாக பெங்களூரு அணி அவருக்கு பதில் ஒரு தகுதியான வீரரை தனது அணியில் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஏபிடி வில்லியர்ஸ்க்கு மாற்று வீரராக இந்த மூன்று வீரர்கள் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
முதலாவதாக தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ்க்கு மாற்று வீரராக செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.இவர் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 119 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது தான் இதற்கு காரணம்.
இரண்டாவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார் இந்த போதும் 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு இவர் சிறப்பாக செயல்படவில்லை, இதன் காரணமாக அவர் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தக்கவைத்துக்கொள்ள படமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏபி டிவில்லியர்ஸ்க்கு பதில் ஜானி பேர்ஸ்டோவை தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல முறை தனது அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், குறிப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக செயல்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
அப்படிப்பட்ட திறமை படைத்த ஜோஸ் பட்லர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்க்கு பதில் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.