பைக்கை தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கிய கரடி - படுகாயங்களுடன் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
சாலையில் சென்றவர்களை கரடி ஒன்று வழிமறித்து கொடூரமாக தாக்கியதில் மசாலா வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடூரமாக தாக்கிய கரடி
தென்காசி மாவட்டம் கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்ட மணி இவர் சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார்.
வனப்பகுதியின் நடுவுவிலான சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி, இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்ட மணியை கடித்து குதறியது.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி விட முயன்ற நிலையில், நாகேந்திரன், சைலேந்திரன் என்ற இருவரையும் அந்த கரடி கடித்தது.

3 பேர் முகத்தை சிதைத்தது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, நாகேந்திரன், சைலேந்திரன் ஆகிய மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்பொழுது மூன்று பேரை கடித்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்திப் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    