யூடியூப் பார்த்து காட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மூவர் - இறுதியில் நேர்ந்த சோகம்!
நகர வாழ்க்கையை துறந்து காட்டு வாழ்க்கைக்கு சென்ற மூவருக்கு நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு வாழ்க்கை
அமெரிக்காவில், கொலராடோ மாகாணத்தில் உள்ள ஸ்பிர்ங்ஸ் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ரெபெக்கா வான்ஸ் அவரது சகோதரி கிறிஸ்டின் மற்றும் 13 வயது சிறுவன் என மூன்று பேர் உள்ளனர். இவர்கள் சேர்ந்து நகர வாழ்க்கையை துறந்து காட்டு வாழ்க்கையை வாழ விரும்பி உள்ளனர்.
இதனை கடந்த வருடம் முடிவு செய்துள்ளனர், பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில எப்படி வாழ்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து, காட்டிற்குள் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி ராக்கி மலைத்தொடரில் இருந்து தொலைதூரத் மலை பிரதேசத்திற்கு சென்றனர். சில காலம் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், கடந்த ஜூலை 9-ம் தேதி குன்னிசன் தேசிய வன பகுதியில் மலை ஏறும் வீரர்கள் சிலர் மோசமாக சிதைந்து கிடந்த இருவரின் உடல்களை பார்த்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அப்பகுதியில் கூடாரம் ஒன்று இருந்துள்ளது அதன் அருகில் இரண்டு உடல்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மற்றொரு நபரின் உடல் கூடாரத்திற்கு வெளியே சுமார் 9500 அடி உயரத்தில் ஒரு இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இது பற்றி பேசி உள்ள ரெபேக்காவின் மற்றொரு சகோதரியான ஜாரா நாங்கள் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் எங்கள் பேச்சை கேட்க அந்த மூவரும் தயாராக இல்லை என்று கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், அந்த சகோதரிகள் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.