விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை..!
திருமுல்லைவாயிலில் 3பேர் பலி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிரேம்குமார்.இவரது வீட்டில் தண்ணீர் தொட்டியில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் இன்று 10 அடி கீழ் நிலை நீர் தேக்க தொட்டியை வீட்டின் உரிமையாளர் பிரேம்குமார் சுத்தம் செய்து உள்ளார்.
அப்போது விஷவாயு தாக்கி பிரேம்குமார், மயங்கி தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.
இவரை காப்பாற்ற இவரது மகன் பிரதீப் குமார் உள்ளே இறங்கி உள்ளார்.அப்போது இவரையும் விஷவாயு தாக்கி இருக்கிறது.
அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான சாரநாத்,பிரமோத் குமார் ஆகிய 2 பேரும் தந்தை,மகனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
அப்போது இவர்களையும் விஷவாயு தாக்கி இருக்கிறது. இதில் பிரேம்குமார்,பிரதீப் குமார், பிரமோத்குமார் ஆகிய மூன்று பேரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சாரநாத் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று முழுவதுமாக தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வந்து தண்ணி தொட்டி பார்த்த பொழுது மீண்டும் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் இருந்துள்ளது.
இதை சுத்தம் செய்ய முயற்சி செய்த பொழுது விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.