தென்னாப்பிரிக்கா தொடர் தான் கடைசி வாய்ப்பு... 3 இந்திய வீரர்களுக்கு சிக்கல்...
தென்னாப்பிரிக்கா தொடரில் சொதப்பினால் 3 இந்திய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்தியா வரும் தென்னாப்பிரிக்கா அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கே.எல் ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இதனிடையே இந்த தொடரில் சொதப்பினால் 3 இந்திய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வுக்கு கடைசி வாய்ப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த தொடரில் சொதப்பினால் இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் நியூசிலாந்து மற்றும் இலங்கை தொடரை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹர்திக் பாண்டியா திரும்பியுள்ளதால் இவர் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே எதிர்காலத்தில் இடம் நிச்சயம் என சொல்லப்படுகிறது.
- கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் சொதப்பினார். இதனால் இனிமேல் இவரை நம்பி இந்திய அணி வாய்ப்பு கொடுக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.