3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி!
அடையாளம் தெரியாத நபரால் 3 சிறுமிகள்பாலியல் வன்கொடுமை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய 3 சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அதில், சிறுமிகளை அடையாளம் தெரியாத நபரிடம் அழைத்துச் சென்றது 4-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து அந்த சிறுமியிடம் அவரின் குடும்பத்தினர் நடத்திய விசாரணையில், "தங்களை சாக்லேட் தருவதாக கூறி அந்த 4-ம் வகுப்பு மாணவன் குறிப்பிட்ட அடுக்குமாடிக்கு அழைத்துச் சென்றார்.
3 தனிப்படைகள்
அங்கு ஒருவர் தங்களுக்கு சாக்லேட் கொடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எங்களிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டார்.
இதுகுறித்து வெளியில் வெளியில் சொல்லக் கூடாது என்றும் அந்த நபர் மிரட்டியதாக சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 4-ம் வகுப்பு மாணவனுக்கு, அந்த மர்ம நபர் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
