இந்த 3 பேர் இந்திய அணிக்கு தேவையில்லை - நியூசிலாந்தை ஜெயிக்க இதுதான் ஒரே வழி...!
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஆடும் லெவன் அணியை வலுவானதாக அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 24) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோற்பது இதுவே முதல்முறையாகும்.
இதனால் அரையிறுதிக்குச் செல்ல அடுத்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலும் தோற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இப்படியொரு இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளதால் ஆடும் லெவன் அணியை வலுவானதாக அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அணியில் தற்போது உள்ள இந்த 3 பேருக்குப் பதிலாக மாற்று வீரர்களைக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதாவது ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா,வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்க போகிறது என்பது அக்டோபர் 31 ஆம் தேதி தெரியும்..!