ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் 3 ராணுவ வீர்கள் வீர மரணம்!
காஷ்மீரில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
வீர மரணம்
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
தேடுதல் பனி தீவிரம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 4 ஏகே 47 துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும், தேடுதல் பனி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.