2-வது முறையாக கோவா முதலமைச்சராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கோவா மாநிலத்தில் தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.
பிரமோத் சாவந்துக்கு மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.