தமிழகத்தில் 28-வது மெகா தடுப்பூசி முகாம் - 50 ஆயிரம் முகாம்கள் அமைப்பு..!

COVID-19 Vaccine
By Thahir Apr 30, 2022 07:01 AM GMT
Report

தமிழகம் முழுவதும் 28வது மெகா தடுப்பூசி முகாம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த 28வது மெகா தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1600 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் கொரோனா தொற்று குறைவாக இருந்த போது தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தால் 1.4 கோடி பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.4 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக இன்று காலை 9 மணி முதல் இந்த 28 வது மெகா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமானது மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.