உதயநிதி மீது நடவடிக்கை வேண்டும்....262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
உதயநிதி கருத்து - எழுந்த சர்ச்சைகள்
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில தினங்கள் முன்பு தமிழக முற்போக்கு எழுத்தளார்கள் சங்கம் தரப்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், டெங்கு, மலேரியா போன்ற சனாதனத்தை ஒழிக்கப்பட வேண்டுமென அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு நாடெங்கிலும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
262 பேர் கடிதம்
முன்னதாகவே, டெல்லியில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நாடு முழுவதும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிரபலங்கள் என 262 பேர் கடிதம் எழுதி இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.