டெல்லி வணிகக்கட்டிடத்தில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு..!

Narendra Modi Delhi
By Thahir May 13, 2022 07:46 PM GMT
Report

டெல்லியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி வணிகக்கட்டிடத்தில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு..! | 26 Killed In Delhi Business Building Fire

தீ விபத்தில் இருந்து 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், 3 மாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அதுல் கார்க் கூறுகையில்,தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும்,மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன.காயமடைந்தவர்கள் விரையில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.c