அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படும் - அதிரடி உத்தரவு!

Kerala Congress Kerala
By Vinothini Jul 14, 2023 07:35 AM GMT
Report

கேரளாவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று மாநில அமைச்சரவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

கேரளாவில் அரசு ஊழியரின் மரணத்திற்குப் பிறகு, கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர் தங்களைச் சார்ந்தவர்களைக் காக்கத் தவறியவர்களின் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதத்தை பிடித்தம் செய்து, தகுதியுடைய சார்புடையோருக்கு வழங்கப்படும் என்று மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

25-percent-salary-deduction-in-kerala

இதில் 17 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைத் தொகையும் அடங்கும். கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் குடும்ப உறுப்பினர்களின் நலனைப் பேணுவார் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே வழங்கப்படும். இதனை மீறுபவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அறிவிப்பு

இதனை தொடர்ந்து, சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதி வாரியத் திட்டங்களின் கீழ் ஓய்வூதிய உதவி பெறும் சார்புடையவர்கள் இந்த அறிவிப்பின் கீழ் அடங்குவர். ஆனால் குடும்ப-ஓய்வூதியத் திட்டப் பலன்களைப் பெறும் சார்புடையவர்களுக்கு இந்த ஏற்பாடு செல்லுபடியாகாது.

25-percent-salary-deduction-in-kerala

மேலும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் தங்களைச் சார்ந்துள்ளவர்களை புறக்கணிப்பது கண்டறியப்பட்டால், நியமன அதிகாரி அவர்கள் மீது புகார் அளிக்கலாம். தாசில்தார் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சம்பளம் பறிமுதல் செய்யப்பட்டு, தகுதியுடைய சார்பதிவாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது குறித்து விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள், மூன்று மாதங்களுக்குள் கலெக்டரிடம் முறையிடலாம். ஆனால், கலெக்டர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்படுகிறது.