ரயில் தடம் புரண்டு விபத்து - 22 பேர் உயிரிழப்பு, 50 பேர் படுகாயம்..!
பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரயில் தடம் புரண்டு விபத்து
பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்தது.
இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த ரயில் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்ததால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
காரணம் என்ன?
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.படுகாயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Breaking news ? ??
— مارخورⓂ (@Markhor_ispr) August 6, 2023
20+ people died and over 50+ people were injured after 10 bogies of Rawalpindi-bound Hazara Exp derailed near Sahara Rail Station, located between Shahzadpur and Nawabshah.#TrainAccident #hazaraexpress#Pakistan #imrankhanPTI #PakistanArmy #NewsUpdate pic.twitter.com/uagtpTvacs