ரயில் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 21 பேர் பலி - பரிதவிக்கும் குடும்பங்கள்!
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
இத்தாலியில் தினந்தோறும் உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், வெனிஸ் நகரில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் செல்லும் போது சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
21 பேர் பலி
அதில், 21 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.