பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 21 விளையாட்டு வீரர்கள் பலி
பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
நைஜீரியா, ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தடகள வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
21 வீரர்கள் பலி
தற்போது இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக பஸ்ஸை இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துக்களினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.