Monday, Jun 23, 2025

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இருவர் தேர்வு - இவர்கள் சாதித்தது என்ன?

United States of America World Medicines
By Karthikraja 9 months ago
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 2024 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

nobel prize

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவத்திற்கான நோபல்

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ்(Victor Ambros) மற்றும் கேரி ருவ்குன்(Gary Ruvkun) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Victor Ambros Gary Ruvkun

மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் இவர்களின் கண்டுபிடிப்பு இன்றியமையாதது என நோபல் குழு தெரிவித்துள்ளது. 

இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. இந்த பரிசு ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.