2022-2023-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இவைதான்
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இங்கே
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 10,01,083 மனுக்களுக்கு தீர்வு.
கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தமளிக்கிறது.
திராவிட மாடலின் இலக்கணமாக முதல்-அமைச்சர் திகழ்கிறார்
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்.
அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு
வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை அரசு உருவாக்கும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு. போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,714 கோடி ஒதுக்கீடு
சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க நிதி இந்த நிதியாண்டில் ஒப்புதல்.

4131 ரூபாய் கூட்டுறவுத்துறைக்காக ஒதுக்கீடு. * 7500 கோடி ரூபாய் பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ஒதுக்கீடு.
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காக ரூ.3,384 கோடி ஒதுக்கீடு.
காவேரி பாசன பகுதிகளில் நீர் வழித்தடம் மற்றும் சீரமைப்பிற்கு ரூ.3384 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும்.
சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
விலங்குகளை பராமரிக்க அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவி செய்ய வள்ளலார் காப்பக திட்டம் உருவாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.
தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்.
நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச்சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கி.மீ. கால்வாய்கள் தூர்வார ஒப்புதல்
15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்
டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு
5.6 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக காட்சி நடத்தப்படும்.
தமிழர்களின் மரபை கொண்டாட கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.
உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 17,901 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு ,கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு, 6 புதிய கூட்டுறவு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்தில் இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
வெளி வட்ட சாலையின் இருபுறமும் உணவகம் உள்ளிட்ட கடைகளும் உருவாக்கப்படும்
இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்துக்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.