பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி பலி : கைதான 8 பேரும் விடுதலை
Chennai
Crime
By Irumporai
2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலி
பேருந்து ஓட்டையில் விழுந்த சிறுமி சென்னை தாம்பரத்தில் கடந்த 2012 - ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, பேருந்து ஓட்டையில் இருந்து கீழே விழுந்தார், இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
விடுதலை கொடுத்த நீதி மன்றம்
இந்த சம்பவம் தொடர்பாக 8 - பேர் கைது செய்யப்பட்டனர், இது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 நபர்களையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.