திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை - 17 இடத்தில் கத்தியால் குத்திய கொடூரம்

crime kerala woman killed
By Petchi Avudaiappan Aug 31, 2021 04:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 கேரளாவில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகேயுள்ள கரப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவதாஸ் -வல்சலா தம்பதியினரின் ஒரே மகள் சூர்ய காயத்திரிக்கும் கொல்லத்தை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்ய காயத்திரி கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இதனிடையே சூர்ய காயத்திரிக்கு பேயாடு பகுதியை சேர்ந்த அருண் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை திருமணம் செய்ய அருண் விருப்பியுள்ளார். இதற்கு சூர்ய காயத்திரி மறுப்பு தெரிவித்து வரவே நேற்று மாலை மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அருண் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்ய காயத்திரியின் வயிறு, நெஞ்சு உட்பட 17 இடங்களில் சரமாரியாக குத்தினார். மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் வல்சலா அங்கு வர அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை - 17 இடத்தில் கத்தியால் குத்திய கொடூரம் | 20 Year Old Kerala Woman Stabbed Multiple Times

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிய சூர்ய காயத்திரி, படுகாயடைந்த வல்சா ஆகியோரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சூர்ய காயத்திரி இறந்தார். தாய் வல்சலாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே தப்பியோடிய அருணை அப்பகுதி பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து நெடுமங்காடு போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.