ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை - அதிர்ச்சி தகவல்!
ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக ஈரானிய பிரபல நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப்
ஈரானில் பெண்கள் பொது இடங்களில் பெண்கள் தோன்றினால் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயம். 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் ஈரானின் பிரபல நடிகை அஃப்சநெஹ் பாயேகன் (61) ஒரு திரைப்பட விழாவில் தலையில் ஹிஜாப் இல்லாமல் தோன்றினார். அதுமட்டுமல்லாமல் அவர் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வளைத்த தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தீர்ப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீதி மன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையில் "ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நடிகை அஃப்சநெஹ் பாயேகனுக்கு 61 வயது ஆகிறது என்றும் அவருக்கு மனநிலை சரியில்லை என்று வாதாடிய போதும் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறையில் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.