ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் தமிழர்கள் 2 பேர் உட்பட 17 பேர் உயிரிழப்பு - கதறும் குடும்பத்தினர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
17 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு
மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் (VSL) கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார்.
விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.