சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

M K Stalin Tamil nadu Nilgiris
By Jiyath Jan 07, 2024 11:39 AM GMT
Report

றுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

சிறுத்தை தாக்குதல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு! | 2 Killed Leopard Attack Cm Stalin Fund Announced

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் கிருத்திகா என்ற 4 வயது சிறுமியை சிறுத்த தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்துச் சென்று தாக்கியது.

2 பேர் பலி

இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொடர் சிறுத்தை அட்டகாசத்தை தடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு! | 2 Killed Leopard Attack Cm Stalin Fund Announced

இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்